2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழ். மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 18 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரஜினி)


யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கிராம மட்டத்தில் அபிவிருத்தியை சிவில் பாதுகாப்பு குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தால் நாட்டின் அபிவிருத்தியை மேம்படுத்த முடியும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்; இதன்போது தெரிவித்தார்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒவ்வொரு கிராம மட்டத்திலும் நடைபெறுகின்ற குற்றச்செயல்கள் மற்றும் தவறுகள் சுட்டிக் காட்டப்படும் சந்தர்ப்பங்களில் சிவல் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் முன் நின்று தீர்த்து வைக்க வேண்டும். அவ்வாறு தீர்த்து வைக்கப்படுமானால் நல்ல சமூக கட்டமைப்பினை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.

இக்கூட்டத்தின் போது கிராம மட்டங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டு அவற்றை தீர்வுக்கு கொண்டு வரும் முறையில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

பிரச்சினைகளுக்கான தீர்வுகள் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா முன்னிலையில்; தீர்வுக்கு கொண்டு வரப்பட்டன.

இந்நிகழ்வில், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின், யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் செ.ஸ்ரீ.குகநேசன், யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம், யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா மற்றும் காங்கேசந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட யாழ். மாவட்ட பிரதேச செயலாளர், சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .