2025 ஜூன் 21, சனிக்கிழமை

மனைப் பொருளாதார திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு உபகரணங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 18 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(த.சுமித்தி)


வாழ்வெழுச்சி மனைப்பொருளாதார திட்டத்தின் கீழ் தேசிய அருங்கலைப் பேரவையில் பயிற்சி பெற்றவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மோகனேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சும் இணைந்து நடத்திய இப்பயிற்சி நெறியில் சுமார் 2300பேர் தெரிவு செய்யப்பட்டு 667பேர் பயிற்சிகளை நிறைவு செய்துள்ளனர்.

பயிற்சிகளை நிறைவு செய்த 667 பேரில் முதற்கட்டமாக் கோப்பாய், சண்டிலிப்பாய், சங்கானை, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பயிற்சியாளர்கள் 107 பேருக்கும் ரூ.10,000 பெறுமதியான உபகரணங்கள் இன்றைய தினம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், யாழ். மாவட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் தேசிய அருங்கலை பேரவையின் உத்தியோகஸ்தர்கள் உட்பட பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் கெங்காதரன் மற்றும் பயிற்சியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .