2025 ஜூன் 21, சனிக்கிழமை

போலியான தங்க ஆபரணங்களை வங்கிகளில் அடகு வைக்கும் சம்பவங்கள் யாழில் அதிகரிப்பு: பொலிஸார்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 22 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

போலியான தங்க ஆபரணங்களை வங்கிகளில் அடகுவைக்கும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகாரித்துள்ளதாக யாழ்.பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சிறிகுகனேசன் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அண்மைக்காலமாக யாழ்.மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் இவ்வாறான போலி ஆபரணங்கள் அடகு வைத்து பணம்பெறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக வவுனியாவில் பகுதியில் இருந்து வருகை தந்த அவ்வாறான மோசடி வேலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சிறிகுகனேசன் குறிப்பிட்டார்.

மானிப்பாயில் உள்ள வங்கி ஒன்றில் 500,000 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள்  அடகுவைத்து பணம்பெறப்பட்டுள்ளது. அதேபோன்று கோப்பாயில் உள்ள வங்கி ஒன்றில் போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி 5,500,000 ரூபாவுக்கு தங்க ஆபரணம் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை உரும்பிராயில் உள்ள அரச வங்கி ஒன்றில் 7 தடவைகள் பொலியான தங்க ஆபரணங்கள் அடகு வைத்த சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

அத்துடன் போலி தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி தங்க ஆபரணங்களை அடகு வைக்கப்பட்ட சம்பவம் ஒன்றும் பதிவுவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மானிப்பாயில் உள்ள வங்கி ஒன்றில் 500,000 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் அடைவுவைத்து பணம்பெறப்பட்டுள்ளது.

அதேபோன்று கோப்பாயில் உள்ள வங்கி ஒன்றில் போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி 5500,000 ரூபாவுக்கு தங்க ஆபரணம் அடகுவைக்கட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை உரும்பிராயில் உள்ள அரச வங்கி ஒன்றில் 7 தடவைகள் போலியான தங்க ஆபரணங்கள் அடகு வைத்த சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.

அத்துடன் போலி தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி 5,490,000 ரூபாவிற்கு தங்க ஆபரணங்களை அடகு வைக்கப்பட்ட சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .