2025 ஜூன் 21, சனிக்கிழமை

கழிவொயில் தாக்குதல்களை மேற்கொள்பவர்களை பிடித்து தந்தால் அவர்களுக் கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும்

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 22 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ்ப்பாணத்தில் கழிவொயில் தாக்குதல்களை மேற்கொள்பவர்களை பிடித்து தந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சிறிகுகணேசன் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

தென்னிலங்கையில் இருந்து வருகை தரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் யாழ். நகரத்தில் வந்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் முஸ்லிம் சமூத்தினர் சட்டத்திற்கு மாறாக வீதியில் டயர்கள் கொழுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் பொலிஸார் அனுமதி வழங்குகின்றனர். ஆனால், தமிழ் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த பொலிஸார் தடைவிதித்து வருவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போது யாழ். நகரத்தின் பாதுகாப்பு கடமைக்கு தானே பொறுப்பாக இருப்பதாகவும் தனது அனுமதியுடனே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாகவும் ஆர்பாட்டத்திற்கு ஆதரவாக போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் வீதிகளில் ஆர்ப்பாட்டத்தின் போது டயர் எரிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டதாக என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது, டயர் எரிப்பதற்கு அனுமதி இல்லை. யாழிலும் யாரும் தனது கருத்துக்களை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியும். ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது நிலமைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கட்டுப்பாடுகளை மீறும்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .