2025 ஜூன் 21, சனிக்கிழமை

வீடமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் காணி உரிமம், காசோலை வழங்கும் நிகழ்வு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 24 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

உலக குடியிருப்பாளர் தினத்தை முன்னிட்டு வீடமைப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காணி உரிமம் மற்றும்; கிராமத்திற்கு ஒரு வீடு திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ் மாவட்ட காரியாலயத்தில் மாவட்ட இணைப்பாளர் நோயல் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான காசோலை மற்றும் காணிப்பத்திரங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் வசிக்கும் 20 பயனாளிகளுக்கான காணி உரிமங்களும் வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 10 பயனாளிகளுக்கான இறுதிக்கட்ட காசோலைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .