2025 ஜூன் 21, சனிக்கிழமை

வீட்டைப் பதம் பார்த்தது பனைக்கு வைத்த தீ

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 24 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமிதா)

இன்று திங்கட்கிழமை இரவு இனந்தெரியாதோரால் பனை மரக் காட்டுக்கு தீ மூட்டப்பட்டதால் அருகிலிருந்த குடிசை ஒன்று எரிந்து நாசமாகியுள்ளது. இச்சம்பவம் யாழ். மணியந்தோட்டம், 13ஆம் குறுக்கில் இன்று இரவு 9 மணியளவில் நடைபெற்றுள்ளது.

பனை மரங்களுக்கு மூட்டிய தீ கொழுந்துவிட்டெரிந்து அருகிலுள்ள குடிசைக்குத் தாவியுள்ளது. இதனால் குடிசை முற்றாக எரிந்து நாசமாகியபோதிலும் எவருக்கும் தீக்காயம் ஏற்படவில்லை. விரைந்து செயற்பட்ட யாழ். மாநகரசபை தீயணைப்புப் படையினர், பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிலைமை மோசமடையாமல் பாதுகாத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .