2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழ். புகையிரத நிலையப் பகுதியில் குண்டு வெடிப்பு; மறுக்கிறது இராணுவம், பொலிஸ்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(த.சுமித்தி)


யாழ். புகையிரத நிலையத்துக்கு பின்புறமாக குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றறுள்ளது. புகையிரத நிலையத்துக்கு பின்புறமாக உள்ள பற்றைக்குள் நேற்று திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தை அடுத்து அவ்விடத்திற்கு இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் சென்று பார்வையிட்டதாகவும் வெடிப்பு இடம்பெற்ற பகுதியை இராணுவத்தினர் மண் போட்டு மூடிச் சென்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் இவ்வாறானதொரு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் தமக்கு தெரியாது எனவும் இது தொடர்பில் எவ்வித தகவல்களும் பதிவாகவில்லை எனவும் பொலிஸ் மற்றும் இராணுவ தரப்பு குறிப்பிடுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X