2025 ஜூன் 21, சனிக்கிழமை

காரைநகரில் குடிநீருக்கு தட்டப்பாடு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

காரைநகர் பிரதேசத்தில் குடிநீருக்கு பாரிய தட்டப்பாடு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நாளாந்தம் மூவாயிரம் லீற்றர் குடிநீரை இலவசமாக வழங்க வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது. இதற்கமைய முதற்கட்டமாக நேற்று திங்கட்கிழமை 10,000 லீற்றர் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.  வறட்சியான காலநிலை நீடிக்கும் வரை தொடர்ச்சியாக நீர்விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக வலி, கிழக்கு பிரதேச சபைத் தலைவர் அ.உதயகுமார் தெரிவிக்கையில்,

காரைநகரில் ஏற்பட்டுள்ள குடிநீர்பிரச்சினை தொடர்பாக காரைநகர் பிரதேச சபையினால் தமக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக தாம் நேரடியாக சென்று நிலைமைகளை ஆராய்ந்த போது அங்குள்ள மக்கள் ஒரு லீற்றர் குடிநீரை ஒரு ரூபாவிற்கு பெறுவதாகவும் நாளாந்தம் குடிநீருக்காக 400 ரூபாவினை செலவிட வேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை காலமும் காரைநகர் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு சுன்னாகத்தில் இருந்தே நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் தற்போது வறட்சிகாரணமாக சுன்னாகம் பகுதியில் நீர்பெறுவதில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதால் வலி, கிழக்கு பிரதேச சபையினால் நாளாந்தம் காரைநகர் பிரதேசத்திற்கு 3000 லீற்றர் இலவசமாக குடிநீர்வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக' அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .