2025 ஜூன் 21, சனிக்கிழமை

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் யாழில் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு வீடு ஒரு கிராமம் என்ற வீட்டுத் திட்டத்தில் தெரிவாகிய வீட்டுப் பயனாளிக்கான வீடு இன்று கையளிக்கப்பட்டது.

யாழ். குருநகர் கடற்கரை வீதியில் அமைக்கப்பட்ட புதிய வீட்டினை யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா நாடா வெட்டி திறந்து வைத்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவம்ஸவினால் வீட்டுத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் தலைமையில் சுமார் 129 புதிய வீடுகள் கட்டுவதற்கான கடனுதவிகள் வழங்கப்பட்டன.

புதிய வீடுகள் நிர்மாணிப்பதற்காக வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபா நிதியில் கடந்த மே மாதம் முதன் முதலாக இவ்வீட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, 4 மாத காலப்பகுதிக்குள் புதிய வீடு கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றுள்ளதுடன், மேலும் 128 வீடுகளுக்கான கட்டிட வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .