2025 ஜூன் 21, சனிக்கிழமை

மின்சாரம் தாக்கியதில் இளைஞர் மரணம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 27 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை சங்கரத்தைப் பகுதியில் இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மல்லாவி, அனிஞ்சியன்குளம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி திருக்குமரன் (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பக்கோ வாகன சாரதியான குறித்த இளைஞர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் பீய்ச்சி அடிக்கும் குழாய் மூலம் வாகனத்தை சுத்திகரித்துக் கொண்டிருந்த வேளை, குழாய் மூலம் மின் ஒழுக்கு ஏற்பட்டு இளைஞர் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

அருகில் இருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கியவரை தூக்கி யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டவேளை உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .