2025 ஜூன் 21, சனிக்கிழமை

சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட மரங்கள் கைப்பற்றல்

Super User   / 2012 செப்டெம்பர் 27 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்ட மரங்கள் இரு பிரதேசங்களில் கைப்பற்றப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஏ.ஜயவீர தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி மரம்; ஆலை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் அருக்கப்பட்ட மரங்களும், ஆனவனங்கி என்ற காட்டு பிரதேசத்தில் அருக்கப்பட்ட நிலையில் இருந்து மரங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆனவனங்கி என்ற காட்டு பிரதேசத்தில் மரம் வெட்டப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து குறித்த பிரதேசத்தை பொலிஸார் சுற்றி வளைத்த போது மரத்தை வெட்டியவர்கள் தலைமறைவாகியுள்ளதுடன் மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை ஓட்டமாவடி மரம் அறியும் ஆலை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் அருக்கப்பட்ட மரங்களை பொலிஸ் பரிசோதகர் ரணசிங்க தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்களையும் மரங்களையும் நாளை வெள்ளிக்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஏ.ஜயவீர மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .