2025 ஜூன் 21, சனிக்கிழமை

கோண்டாவில் இந்து மகா வித்தியாலத்தில் அடிக்கல் நடு விழா

Super User   / 2012 ஒக்டோபர் 01 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


மஹிந்த சிந்தனையின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும்  ஆயிரம் பாடசாலைக்களுக்கான விஞ்ஞான தொழில்நுட்ப கூடங்களை அமைக்கும் திட்டத்தின் கீழ் யாழ். கோண்டாவில் இந்து மகா வித்தியாலத்தில் விஞ்ஞான தொழில்நுட்ப கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்;று திங்கட்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் ஸ்ரீஸ்கந்தராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம ஆதிதியாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலக்ஷ்மி ஆகியோர் கலந்துகொண்டு கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தனர்.

அத்துடன் பாடசாலையில் மாணவர்களுக்கான இலைக்கஞ்சித்திட்டமும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதேவேளை, சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய காரியாலயத்தால் 'சிறுவர் உரிமையும் கடமையும் பொறுப்புனர்வும்' என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு செயலமர்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

வேலணை மத்திய கல்லூரியில் நடைபெற்ற இந்த விழிப்புனர்வு நிகழ்வில்  தீவக வலயத்தைச் சேர்ந்த சுமார் 200  மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் சிறுவர் உரிமைகள் தொடர்பாக யாழ். மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் கருத்துரை வழங்கினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .