2025 ஜூன் 21, சனிக்கிழமை

வடமாகாண ஆசிரிய நியமனங்கள் தொடர்பில் கல்வியமைச்சருக்கு விளக்க கடிதம்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 03 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த சிந்தனைக்கமைவாக 'ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின்' கீழ் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனங்கள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லையென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு விளக்கக் கடிதமொன்றை எழுதியுள்ளார். 

இக்கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாடளாவியரீதியில் ஆயிரம் பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு மூவாயிரம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக, விஞ்ஞான பாடத்திற்கு 500 ஆசிரியர்கள், கணித பாடத்திற்கு 500 ஆசிரியர்கள், ஆங்கில பாடத்திற்கு 1000 மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்திற்கு (ஐஊவு) 1000 ஆசிரியர்கள் என்ற முறையில் மூவாயிரம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் 90 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளபோதிலும் ஆசிரிய நியமனங்கள் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை.

இதனடிப்படையில் விஞ்ஞான பாடத்திற்கு 45 ஆசிரியர்கள், கணித பாடத்திற்கு 45 ஆசிரியர்கள், ஆங்கில பாடத்திற்கு 90 ஆசிரியர்கள், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்திற்கு  90 ஆசிரியர்கள் என நியமனங்கள் வழங்கப்படவேண்டிய நிலையில் விஞ்ஞானத்திற்கு 5, கணிதத்திற்கு 36, ஆங்கிலத்திற்கு 5, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்திற்கு; (ஐஊவு) 56 என ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் மடு மற்றும் வவுனியா கல்வி வலயங்களிலும் மேற்குறிப்பிட்ட பாடங்களுக்கு அதிகளவான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது.

இதேவேளை, இப்பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகளில் விஞ்ஞான கல்வி வழங்கமுடியாத நிலை காணப்படுகின்றதாகவும் இவ்விடயம்  தொடர்பில் உரிய நடவடிக்கையை எடுக்குமாறு இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .