2025 ஜூன் 21, சனிக்கிழமை

அல்வாய் கிழக்கு பாரதி சனசமூக நிலையத்திற்கு நிதியுதவி

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 05 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவின்  பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பருத்தித்துறை அல்வாய் கிழக்கு பாரதி சனசமூக நிலையத்திற்கு மலசலகூடம் அமைப்பதற்கு 50,000 ரூபா  நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவின் செயலாளர் நேற்று தெரிவித்தார்.

சனசமூக நிலையத்தில் இயங்கும் முன்பள்ளிச் சிறார்களின் பயன்பாட்டிற்கு மலசலகூடம் அமைப்பதற்கு நிதியுதவி வழங்குமாறு சனசமூக நிலையத்தினர் விடுத்த கோக்ரிக்கையையடுத்து இந்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இம்முன்பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறார்கள் கல்வி கற்கின்றனர்.  போதியளவு மலசலகூட வசதியின்மையால் இவர்கள் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .