2025 ஜூன் 21, சனிக்கிழமை

நாட்டின் நிலையான அபிவிருத்திற்கு இனங்களிடையேயான சக வாழ்வும் சமாதானமும் அவசியம்: கிழக்கு முதல்வர்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 08 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி)

 
இந்த நாட்டின் நீடித்த நிலையான அபிவிருத்திற்கு இனங்களுக்கு இடையிலான சக வாழ்வுடன்; கூடிய சமாதானமும் பிரதேச அபிவிருத்தியும் அவசியமாகும். இதற்கு சிறந்த உதாரணமாக கிழக்கு மாகாணம் திகழ்கின்றமை இங்கு வாழும் மூவின மக்களுக்கும் பெருமை மிகுந்த விடயமாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
 
இன்று கிண்ணியா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் தலைமை உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்தாக்ர்  முதலமைச்சா தொடாந்து அங்கு உரையாற்றுகையில்,
 
கிழக்கு மாகாணத்தின் முதல் முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமை என்னைச் சேர்ந்தது என்றாலும் நான் மூவின மக்களுக்கும் உரிய முதலமைச்சராக எனது பணியைச் செய்யக் காத்திருக்கிறேன்
 
இம்மாகாண சபையில் இருக்கின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி போன்ற இதர கட்சிகளையும் இணைத்துக்கொண்டு இந்த மாகாணத்தை இந்த நாட்டில் ஒரு முன்மாதிரியான மாகாணமாக மாற்றியமைப்பேன்.
 
தமிழராக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் சிங்களவராக இருந்தாலும் அவர்களின் உழைப்பும் ஆற்றலும் இந்த நாட்டின் அபிவிருத்திக்கே என்பதை எவரும் மறுக்க முடியாது.
 
திருகோணமலை மாவட்டதில் நவீன கைத்தொழில் பேட்டைகளை நிறுவி இம்மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் தொழில் இல்லாப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண எனது தலைமையிலான மாகாண சபை நடவடிக்கை எடுக்கும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.
 
மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றவே திணைக்களங்களை நாடி வருகின்றனர். அரச ஊழியர்கள் அவர்களின் தேவைகளை நிறைவேற்றவே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வகையில் நாட்டின் அபிவிருத்தி கருதி ஊழியர்கள் பொறுப்புணர்ச்சியுடனும்; அர்ப்பணிப்புடனும் சேவையாற்ற வேண்டும்' என்று அவர் தெரிவித்தார்.
 
இக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ.எல்.எம்.ஹஸன் மௌலவி, கிண்ணியா பிரதேச செயலாளர் சீ.கிருஷ்நேந்திரன், பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸி.எம்.முஸ்ஸில் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .