2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழ் கடலில் புதைந்துள்ள போர்க்கலங்களால் பொதுமக்கள் சிரமம்; அகற்றுமாறு கோரிக்கை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 09 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே,பிரசாத்)

யாழ். வடமாரட்சி கிழக்கு, மருதங்கேணி, தாளையடி மற்றும் அதனை அண்டிய கடற்பகுதியில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் அழிவடைந்த போர்த் தளபாடங்கள் கடலுக்கடியில் காணப்படுவதால் அப்பகுதிகளில் தொழில் நடவடிக்கையை மேற்கொள்வதில் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிகளில் விடுதலைப் புலிகள் மற்றும் கடற்படையினரின் கடற்கலங்கள் இக்கடற்பரப்பில் மூழ்கி சிதைவடைந்துள்ளதால் குறித்த பகுதியில் தொழில் நடவடிக்கையை மேற்கொள்ளும் கடற்தொழிலாளர்களின் வலைகள் மற்றும் வள்ளங்கள் நாள்தோறும் சேதமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்பாலும் குறித்த பகுதியில் வாழும் மக்கள் கரைவலைத் தொழில் நடவடிக்கையினை நம்பியே தொழில் நடவடிக்கையை மேற்கொண்டு வருதால் கடலில் உள்ள சிதைவடைந்து காணப்படும் பொருட்களால் கடற்தொழிலாளர்கள் நாளாந்தம் பெரும் நட்டத்தை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நீரியல் வளத்திணைக்களம் மற்றும் கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசம், பருத்தித்துறை நகர சபை ஆகியவற்றுக்கு எழுத்துமூலம் அறிக்கை சமர்பிக்கப்பட்டும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பருத்தித்துறை நகர சபை தலைவர் சஞ்சீவனிடம் கேட்டபோது, இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளதாகவும் விரைவில் இதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .