2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழ். நகரிலுள்ள தொலைத்தொடர்பு நிலையத்தில் திருட்டு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். நகரிலுள்ள தொலைத்தொடர்பு நிலையமொன்றில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான கணினி உதிரிப்பாகங்கள், கையடக்கத் தொலைபேசிகள் ஆகியன நேற்று செவ்வாய்க்கிழமை இரவு திருட்டுப்போயுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி குணசேகர இன்று தெரிவித்தார்.

நல்லூர் செட்டித்தெருவிலுள்ள தொலைபேசி நிலையமொன்றிலேயே இத்திருட்டு இடம்பெற்றுள்ளது.

கடை உரிமையாளர் இன்று புதன்கிழமை காலை கடையைத் திறந்தபோது திருட்டுப் போயுள்ளதைக் கண்டு யாழ். பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார். 

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரமும் இத்தொலைத்தொடர்பு நிலையத்தில் 150,000 ரூபா பெறுமதியான உபகரணங்கள் திருட்டுப் போனமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் யாழ். பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .