2025 ஜூன் 21, சனிக்கிழமை

யாழின் சில பகுதிகளில் மின்தடை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயரழுத்த மற்றும் தாழழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியுள்ளதாலும் புதிய உயரழுத்த மின்மார்க்கங்களை இணைக்கவேண்டியுள்ளதாலும் ஒருசில இடங்களில் மின்விநியோகம் தடைப்படுமென யாழ். பிராந்திய மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வேலைகளுக்காக நாளை சனிக்கிழமை சுன்னாகம், கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, கோண்டாவில், மருத்துவபீடப்பிரதேசம், திருநெல்வேலிப்பிரதேசம், யாழ் மாநகரசபைப்பகுதி, யாழ் பட்டணப்பகுதி ஸ்ரான்லி வீதி, நாச்சிமார் கோவிலடி முதல் தட்டார்தெரு ஊடாக மனோகரா தியேட்டர் வரையான பிரதேசத்தில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை மின் விநியோகம் தடைப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம், கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, தலங்காவில்ப் பிரதேசம், திருநெல்வேலிப் பிரதேசம், பரமேஸ்வரா சந்தி, கந்தர்மடம், ஆரியகுளம், ஸ்ரான்லி வீதி, வேம்படி, குருநகர், பாசையூரின் ஒரு பகுதி, மனோகரா தியேட்டர் முதல் முட்டாசுக்கடைச் சந்தி வரையான பிரதேசம் ஆகிய இடங்களிலும்

எதிர்வரும் திங்கட்கிழமை அளவெட்டி, மல்லாகம் ஒரு பகுதி, பன்னாலை, வித்தகபுரம், சிறுவிளான், விளான், அம்பனை, கரவெட்டி கிழக்கு, கரவெட்டி மத்தி, நெல்லியடிப் பிரதேசத்தின் ஒரு பகுதி, சாமியன் அரசடிப் பிரதேசம், சம்பந்தர் கடைப் பிரதேசம், துன்னாலை, குடவத்தை பிரதேசம், யாக்கருப் பிரதேசம், கிழவிதோட்டம் ஆகிய இடங்களிலும் 

24.10.2012 புதன்கிழமை அளவெட்டி, மல்லாகம் ஒரு பகுதி, பன்னாலை, வித்தகபுரம், சிறுவிளான், விளான், அம்பனை ஆகிய இடங்களிலும் 26.10.2012 வெள்ளிக்கிழமை அளவெட்டி, மல்லாகம் ஒரு பகுதி, பன்னாலை, வித்தகபுரம், சிறுவிளான், விளான், அம்பனை ஆகிய இடங்களிலும் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை மின் விநியோகம் தடைப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார் குறித்த பகுதிகளில் வேலை நிறைவுற்றவுடன் மின்விநியோகம் வழமைக்கு திரும்பும் என்று யாழ். பிராந்திய மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .