2025 ஜூன் 21, சனிக்கிழமை

வடக்கில் இரு பிரதேச சபைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முஸ்தீபு

Super User   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

உள்ளுராட்சி மன்றங்களின் அசிரத்தையான செயல்பாட்டினால் வலி தெற்கு உடுவில் மற்றும் வலி தென்மேற்கு சண்டிலிப்பாய் ஆகிய இரு பிரதேச சபைகளின் மீதும் ஒப்பந்தகாரர் வழக்குத் தாக்கல் செய்ய ஆலோசனை நடத்தி வருகின்றார்.

இதன் முதல் கட்டமாக சட்டதரண்p மூலம் கடிதம் மூலமான கோரிக்கையை அனுப்பி வைத்துள்ளார்.கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர்  புதிய கட்டிடத்தை கையேற்பதில் உள்ளுராட்சி அமைச்சுக்கும் உரிய பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கும் இடையே முரண்பட்ட நிலைமை காணப்பட்டது.

இதன் ஒரு அங்கமாக தற்போது கட்டடம் கட்டியவர்களுக்கான இறுதிக்கட்டக்கொடுப்பனவை வழங்குவதில் உள்ளுராட்சி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் செயல்திட்டத்தின் பிரதிச்செயலாளர் உரிய கொடுப்பனவை விடுவிகாது இழுத்தடித்து வருவதாக  பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 ஏற்கனவே பிரதேச சபைகள் குறிப்பிட்ட நிதியை விடுவிப்பதற்கு வசதியாக உரிய பற்றுச்சீட்டுக்கள் மற்றும் உரிய ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் பிரதேச சபைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நிதியை ஒப்பந்தகாரருக்கு விடுவிக்காது இழுத்தடித்து பிர்ச்சினையை உரிய அதிகாரிகள் தோற்றுவிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .