2025 ஜூன் 21, சனிக்கிழமை

கடற்படையினால் மாதகல் மேற்கு விடுவிப்பு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

கடற்படையினர் நிலைகொண்டிருந்த மாதகல் மேற்கு பிரதேசம், மக்கள் மீள்குடியேற்றத்துக்காக  விக்கப்பட்டுள்ளது என்று சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் முரளிதரன் - தமிழ்மிரருக்கு இன்று திங்கட்கிழழை தெரிவித்தார்.

கடந்த 20ஆம் திகதி குறித்த பிரதேசம் கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இப்பகுதியில் மீள்குடியேறவுள்ள மக்கள் தொடர்பான பதிவுகள் மாதகல் பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதுவரை 269 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் விடுவிக்கப்பட்ட குறித்த பகுதியில் இன்று திங்கட்கிழமை 212 குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று காணி துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அப்பகுதியில் மீள்குடியேறும் மக்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு அமைவாக வீட்டுத்திட்டங்கள், வாழ்வாதார உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் இந்தப் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு மற்றும் வீதி, மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்...


கடற்படையினர் மாதகலிலிருந்து 20ஆம் திகதி வெளியேறுவர்: மு.சந்திரகுமார் எம்.பி

மாதகல் விவகார மனு நவ.12இல் விசாரணை


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .