2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 30 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)


யாழ். போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணி முதல் ஒரு மணிவரை 2 மணித்தியால பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் ஒன்றுகூடிய தாதி உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

யாழ். போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் என்.நற்குணராஜா தெரிவிக்கையில்,

'கடந்த 26ஆம் திகதி சுகாதார அமைச்சுடன் அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்க உறுப்பினர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின்போது தீர்வு கிடைக்காததையடுத்து 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம்.

ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி வெளியிடப்பட்ட 1779ஆம் வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்கு, தாதியர்களின் மேலதிக கொடுப்பனவை அதிகரி, மேலதிக கொடுப்பனவுகளை ஊக்குவிப்புக் கொடுப்பனவாக மாற்று, பழைய சட்டத்திற்கமைய வகுப்புவாரி பதவி உயர்வை உடனே பெற்றுக்கொடு, 5 நாட்களை வேலை நாட்களாக மாற்று போன்ற விடயங்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  கோரியுள்ளோம்.

இக்கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி சுகவீன விடுமுறைப் போராட்டம் நடத்த அரசாங்க தாதி உத்தியோகத்தர்களின் தாய்ச்சங்கம் தீர்மானித்துள்ளது' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .