2025 ஜூன் 18, புதன்கிழமை

விபத்தில் இளைஞர் பலி

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 22 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

மோட்டார் சைக்கிளுக்கு குறுக்காக நாய் ஒன்று ஓடி விபத்துக்கு உள்ளானதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறுவிளான் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் ரவிராஜ் (வயது 23) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு முன்பாகவே நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவர் சுன்னாகம் பகுதியிலிருந்து வீடு திரும்புகையிலேயே விபத்திற்கு உள்ளானதாகவும் இவ்விபத்தில் படுகாயமடைந்த இவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியாசலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான விசாரணையை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .