2025 ஜூன் 18, புதன்கிழமை

அதிகாரம் இன்மையால் சுற்றுச்சூழலும் பண்பாடும் வளங்களும் அழிகின்றன: சுரேஷ் எம்.பி.

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 25 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹேமந்த்


சுற்றுச்சூழலும் பண்பாடும் அரசியல் உரிமையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இவற்றை பேணிப் பாதுகாப்பதற்கான அதிகாரம் தமிழர்களுக்கு தேவை. அந்த அதிகாரம் இல்லாத நிலையில் இன்று எங்கள் விவசாய நிலங்கள் குடியிருப்புக்களாக மாறிக்கொண்டிருக்கின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இயற்கை பண்பாட்டு மரபுவளப் பாதுகாப்பு மையத்தின் ஏற்பாட்டில் இமை நிறுவனத்தின் பசுமை அமைதி விருது வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வீரசிங்கம் மண்டபத்தில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த வைபவத்தில்  அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எங்கள் மண்ணில் இருக்கின்ற காடு உரிய அனுமதியும் நடைமுறையும் இன்றி அழிக்கப்படுகிறது. அதிகாரிகள் சுயமாக முடிவெடுக்கும் திறனை இழந்து விட்டனர். இந்த நிலையில் மிகப் பெரும் பேராபத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் எனவும் கூறினார்.

சூழல் பேணுகையை மையப்படுத்தி இயங்கும் இமை நிறுவனம் நங்கூரம் அறிவியல் இதழுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு இடையில் கடந்த வருடம்  அறிவியல் போட்டியை நடத்தியிருந்தது.

இந்தப் போட்டியில் வெற்றியடைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 319 மாணவர்களுக்கு இதன்போது பரிசில்கள் வழங்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .