2025 ஜூன் 18, புதன்கிழமை

கண்டியில் மாடுகளை அறுக்க தடை

Kanagaraj   / 2013 பெப்ரவரி 26 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.எம்.ரிஃபாத்

கண்டி மாநகர சபை எல்லைக்குள் மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும்.

கண்டி மாநகர சபைக்கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு மாநகர சபையில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் மூவரும் தங்களுடைய கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • aj Tuesday, 26 February 2013 12:47 PM

    நல்ல விடயம். இதற்கு எதற்கு இவர்கள் எதிர்ப்பு? இப்படி எல்லாத்துக்கும் எதிர்ப்பு எதிர்ப்பு என்று போனால் எல்லாத்தையும் எதிர்க்கவேண்டியது தான்.

    Reply : 0       0

    Hari Tuesday, 26 February 2013 02:32 PM

    உயிர்களில் இரக்கம் கொண்ட சமூகமாக காட்டிக்கொள்ளுபவர்கள் இதை அறுப்பதை தடைசெய்வதைவிட அந்த இறைச்சியை வாங்காமலும், கடைகளில் சாப்பிடாமலும் விட்டால் நிச்சயம் அறுக்கப்படும் மாடுகளின் தொகை குறையும். அறுப்பதை தடை செய்தாலும் கடைகளில் விற்பதற்கோ ஹோட்டல்களில் சமைப்பதற்கோ தடையில்லை. எனவே வெளிப்படையாக சொன்னால் பெரும்பான்மை சமூகம் இதை வாங்காமலும் புசிக்காமலும் விடுங்கள். பிரச்சினை தானாகவே குறைந்துவிடும். இதைவிடுத்து அவர்கள்தான் பொரித்த இறைச்சியை கேட்டுக்கொன்டு ஹோட்டால்களுக்குல் புகுந்தால் நிலைமை என்ன?. உயிர்களில் அன்பு? மீன், டின் மீன், முட்டை, இறால், நண்டு இவைகள் கோதம்பமாவினால் செய்யப்பட்டதா?

    Reply : 0       0

    nifraz Tuesday, 26 February 2013 05:24 PM

    தயவு செய்து உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்

    Reply : 0       0

    smn Tuesday, 26 February 2013 07:38 PM

    @aj அவர்களே சந்தோசபடாதீங்கோ!
    இனிமேல் மிருகபலியும் செய்யமுடியாது.
    ஆனால் என்ன மாட்டிறைச்சி சாப்பிட்ட மக்கள் காய் கறிகள் சாப்பிட பழகினால் காய் கறிகளின் விலை தாறு மாறாக ஏறும். அவ்விலையேற்றம் மாடுகளை அறுப்பதற்கு தடை விதித்தவர்கள் உட்பட உங்களையும்தான் பாதிக்கும்.

    Reply : 0       0

    abu saarah Wednesday, 27 February 2013 04:20 AM

    அப்போ கோழி, ஆடு போன்றவை அறுத்தால் பரவாயில்லையா? மீன் விற்றால் பரவாயில்லையா? கன்றைப் பசியில் போட்டு அதன் உணவை அபகரித்து உற்கொள்ளும் பால் நல்லமா? மேலும் காய் கறி, கீரை, பழ வகைகள் போன்றவற்றை உட்கொள்ளலாமா? அவையும் உயிரினம் தானே... முதுகெழும்பு இருந்தால் அவற்றையும் தடை செய்யட்டுமே...
    @aj, எந்த அடிப்படையில் இந்த முடிவை நீங்கள் ஆதரிக்கிறீர்கள். எதற்கெடுத்தாலும் முஸ்லிம்களை மட்டுமே குறை கூறிக் கொண்டிருப்பதை உங்கள் கடந்த கருத்துக்களில் அவதானிக்கிறேன். சுயபுத்தியுடன் தூர நோக்கோடு உங்கள் கருத்துக்களைப் பதியுமாறு ஆலோசனை செய்கிறேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .