2025 ஜூன் 18, புதன்கிழமை

பட்டப்பகலில் பூசணிக்காய் திருடிய இருவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 27 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கிரிசன்

பட்டப்பகல் வேளையில் தோட்டத்துக்குள் புகுந்து பூசணிக்காய்களைத் திருடிய சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று யாழ்ப்பாணம், இணுவில், சிங்கத்தின் கலட்டி வீதியில் இடம்பெற்றுள்ளது.
 
நண்பகல் வேளையில் தோட்ட வெளியில் உள்ள கள்ளுத் தவறனையின் முன்னாள் லாண்ட் மாஸ்ரர் ரக வாகணத்தை நிறுத்திவிட்டு தோட்டத்தில் உள்ள பூசணிக்காய்களைப் பறித்துக்கொண்டிருந்த சந்தேகநபர்கள் தொடர்பில் வழங்கப்பட்ட தகவலை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார், இருவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .