2025 ஜூன் 18, புதன்கிழமை

மின்விளக்கு பொருத்தாத துவிச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு எதிராக நடவடிக்கை

Kogilavani   / 2013 மார்ச் 06 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாவட்டத்தில் துவிச்சக்கர வண்டிகளுக்கு மின் விளக்குகள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ண தெரிவித்தார்.

அதன் பிரகாரம் யாழ். பிரதான வீதிகளில் செல்லும் துவிச்சக்கரவண்டிகள் பொலிஸாரினால் பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக மின்விளக்குகள் மற்றும் பிரேக் பூட்டப்படாத துவிச்சக்கர வண்டிகளை செலுத்தும் ஓட்டுனர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுகப்படுமென யாழ்.போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மின்விளக்குகள் பொருத்தாமலும் பிரேக் இல்லாத நிலையிலும் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் ஓட்டுனர்களின் அடையாள அட்டை கைப்பற்றப்படுவதுடன், ஓட்டுனர்கள் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுவர் என யாழ். போக்குவரத்துப் பொலிஸார் மேலும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .