2025 ஜூன் 18, புதன்கிழமை

பாலியல் குற்றசாட்டு: சந்தேகநபர்கள் இருவரும் விடுதலை

Kanagaraj   / 2013 மார்ச் 06 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இரு நபர்ககளையும்  நிரபராதிகள் என இனங்கண்ட யாழ். மேல் நீதிமன்றம் அவ்விருவரையும் விடுதலை செய்யுமாறு தீர்ப்பளித்துள்ளது.

மல்லாகம் கோட்டைக்காட்டு பகுதியில் 2009 யூன் 05 ஆம் திகதி பெண் ஒருவரை அதே இடத்தினைச் சேர்ந்த இரு நபர்கள் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணினால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் சுன்னாகம் பொலிஸாரினால் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  பின்னர் அந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றினால் யாழ். மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.

மேற்படி வழக்கு யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது.

வழக்கு தொடுநரினால் அளிக்கப்பட்ட வாக்குமூலத்தில், குறிப்பிடப்பட்ட விடயங்கள் நிரூபிக்கப்படாத காரணத்தினாலும்,எதிராளியினால் முன்வைக்கப்பட்ட வாதங்களினால் குறிப்பிடப்பட்ட இரு சந்தேக நபர்களையும் நிரபராதிகள் என கருதிய நீதிமன்றம் அவர்கள் இருவரையும் விடுதலை செய்வதாக யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே. விஸ்வநாதன் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் சந்தேக நபர்களின் சார்பாக சட்டத்தரணி ரெமீடியஸ் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .