2025 ஜூன் 18, புதன்கிழமை

உண்ணாவிரதத்தின் போதான குழப்பம்; பொலிஸார் முரண்பட்ட பதில்

Menaka Mookandi   / 2013 மார்ச் 08 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தெல்லிப்பளையில் நடைபெற்ற உண்ணாவிரத்தின் போது விசில் அடித்தார்கள் அதனால் குழப்பம் ஏற்பட்டதே தவிர உண்ணாவிரத்தினை குழப்பவில்லை என்று யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண இன்று தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தெல்லிப்பளை உண்ணாவிரதம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை என காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.மஹிந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் கடந்த 19ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என போதிய ஆதாரங்கள் முன்வைத்ததுடன், ஊடகவியலாளரின் புகைப்படக்கருவி உடைக்கப்பட்ட நிலையில் வீதியில் இருந்து பொலிஸார் ஒருவரினால் ஊடகவியலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது என ஊடகவியலாளர் மீண்டும் கேள்வி எழுப்பி, இதற்கான பதில் என்ன என்றும் கேட்டார்கள்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் தரப்பில் இருந்து கலந்துகொண்ட அதிகாரிகள் பலர் முன்னுக்கு பின் முரணான பல விடயங்களை தெரிவித்தனர்.

'உண்ணாவிரத்தின் போது பொலிஸார், பொதுமக்களுக்கு முழு பாதுகாப்பும் வழங்கினார்கள். குழப்பநிலைகள் குறித்தும் தாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்தும் எவரும் முறைப்பாடு பதிவு செய்யவில்லை. பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதரங்கள் யாவையும் பார்த்தோம். அவற்றின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம்' என்று மஹிந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரினால் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரதிகளை பார்வையிட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், முறைப்பாட்டு பிரதியில் உள்ள விடயங்களை ஆராய்ந்த பின்னர் எதிர்வரும் காலங்களில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்வதுடன், புலனாய்வும் மேற்கொண்டு சரியான தகவல்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .