2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் அதிகரிக்கும் காசோலை மோசடிகள்

Menaka Mookandi   / 2013 மார்ச் 09 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழில், காசோலை மோசடி தொடர்பாக 40 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பெற்றுத்தருவதாக கூறி போலியான முகவர்களிடம் காசோலைகளை வழங்கி ஏமாற்றப்படுகின்றதாக பொது மக்களினால் நாளொன்றுக்கு 40ற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், கடந்த வியாழக்கிழமை மட்டும் 40 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி போலி முகவர்கள் காசோலை மோசடி செய்கின்றார்கள். காசோலை மற்றும் போலி முகவர்களிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் பதிவு செய்யப்பட்ட முகவரை தேர்ந்தெடுத்து பணத்தினை செலுத்த வேண்டும். போலி முகவர்களை நம்பி ஏமாறாது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண கேட்டுக்கொண்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .