2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

கோப்பாயில் பிரதேச தொழிற்சந்தை

Suganthini Ratnam   / 2013 மார்ச் 22 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கக் கூடிய  'பிரதேச தொழிற்சந்தை' இன்று வெள்ளிக்கிமை நடைபெற்றது.

கோப்பாய் பிரதேச செயலகத்தின் அனுசரணையில் மனிதவள வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இப்பிரதேச தொழிற்சந்தை நடைபெற்றது. இதில்  கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 350 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.

கோப்பாய் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் ம.பிரதீபன் தலைமையிலான இந்நிகழ்வை பிரதம அதிதியாக கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் ஆரம்பித்து வைத்தார்.

யாழ். மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தொழில்வாய்ப்பின்றியுள்ளனர்.
இவ்வாறுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தனியார் துறையில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் இத்தொழிற்சந்தை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தொழிற்சந்தையில் இலங்கையில் உள்ள 12 நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி விளக்கமளித்ததோடு, தங்களது நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்புக்கள் பற்றியும் விளக்கமளித்;தனர்.

இதன்போது தனியார் துறையில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள விரும்பியோரின் தகுதிகளுக்கு ஏற்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .