2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

தொழிற் சங்க நடவடிக்கைக்கு தயார் என இலங்கை ஆசிரியர் சங்கம் அச்சுறுத்தல்

Super User   / 2013 மார்ச் 24 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வட மாகாண ஆசிரியர்களின் சம்பள நிலுவைகள் மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்படாமையினால் தொழிற் சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு, மடு, துணுக்காய், கிளிநொச்சி, வவுனியா வடக்கு உட்பட்ட வட மாகாண ஆசிரியர்களுக்கு நிலுவை சம்பளங்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

அந்தவகையில், 2005 முதல் 2011 வரையிலான காலப் பகுதியில், சம்பள நிலுவைகள் மற்றும் பதவியுயர்வுகள் வழங்கப்படாது, வட மாகாண கல்வி அமைச்சினால் 2005ஃ4, 2008ஃ45, 2006ஃ6, அதன் பின்னர் 2011ஃ30, 2009ஃ25 என பல சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி சம்பள நிலுவைகள் மற்றும் பதவியுயர்வுகள் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

வட மாகாண ஆசிரியர்களுக்கு பல லட்சம் ரூபா சம்பள நிலுவைகள் வழங்கப்படவுள்ளன. சம்பள நிலுவைகள் மற்றும் பதவியுயர்வுகள் சம்பந்தமாக வடமாகாண கல்வி அமைச்சோ, 12 வலய கல்வி அலுவலகங்களோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதனால், கடனுதவிகள், சம்பள உயர்வுகள் இல்லாமையினால், இதனால் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதனடிப்படையில், வட மாகாண கல்வி அமைச்சினால் ஆசிரியர்களுக்கான நிலுவைச் சம்பளங்கள் மற்றும் பதவியுயர்வுகனை மேற்கொள்வதற்கான செயற்த்திட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால் எதிர்வரும் காலங்களில் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .