2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

முன்விரோதத்தினால் வயோதிபர் கையை இழந்தார்

Super User   / 2013 மார்ச் 27 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

முன்விரோதமொன்றின் காரணமாக வயோதிபர் மீது வாள்வெட்டு மற்றும் அசிட் வீச்சுக்கு இடம்பெற்றுள்ளது. யாழ். நாவாந்துறை, பொம்மைவெளி பகுதியில் இந்த சம்பவம் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

நாவாந்துறை ஒஸ்மானிய கல்லூரி வீதியைச் சேர்ந்த 53 வயதான அப்துல் காதர் முஹம்மது அலிம் நிஹார் என்பவர் மீதே முகத்தில் அசிட் வீசப்பட்டதுடன், வாள்வெட்டுக்கும் இலக்காகியுள்ளார். இதனால் இடது கை துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடும்பத்திற் ஏற்பட்ட பழைய பகை காரணமாக உறவினர் ஒருவர் இவரை வாளினால் வெட்டியதுடன் அசிட் வீசியுள்ளதாகவும் அவரது மகள் தெரிவித்தார்.

வாள்வெட்டு மற்றும் அசிட் வீச்சு சம்பவம் தொடர்பாக யாழ். போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .