2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்தி சார்ந்த முன்னேற்றங்களை சில ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன: எம்.சந்திரகுமார்

Kogilavani   / 2013 மார்ச் 29 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'மீள்குடியேற்றத்திற்கு பின்னர் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்நிலை  முன்னேற்றங்கள் சார்ந்த தகவல்களை சில ஊடகங்கள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கின்றன' என  நாடாhளுமன்ற உறுப்பினர்; முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற மக்களின் தேவைகள் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'யுத்தத்திற்கு பின்னரான காலப் பகுதியில் தமது சொந்த இடங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.

மீள்குடியேற்றத்தின் ஆரம்பத்தில் மக்கள் பற்றைகள் நிறைந்த பகுதிகளிலும் கட்டட இடிபாடுகளுக்கு மத்தியிலுமே குடியேறினர். பின்னர் பல அபிவிருத்தி செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றுக்கு மிகப்பெருந் தொகையான நிதியும் செலவிடப்பட்டுள்ளன. ஆனால் இன்று முன் எப்போதும் இல்லாத பல வாய்ப்புக்களையும், வசதிகளையும் மக்கள் பெற்றுள்ளனர்.

அதாவது முன்பு மின்சாரம் இல்லாத பல பகுதிகளுக்கு இன்று மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.  ஓலைக் குடிசைகளில் வாழ்ந்த பெருமளவான மக்கள் நிரந்தர வீடுகளைப் பெற்றுள்ளனர்.

மாரி காலத்திலும், கோடைக்காலத்திலும்  மக்களுக்கு தொடர்ச்சியாக துன்பங்களை விளைவித்து வந்த பல வீதிகள் இன்று புனரமைக்கப்பட்டுள்ளதுடன் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மருத்துவத்துறை, கல்வித்துறை போக்குவரத்து தொலைத்தொடர்பு உள்ளிட்ட அனைத்து துறைகளின் சேவைகளையும் மக்கள் இலகுவாகவும் உயர் தொழிநுட்ப வசதியுடனும் பெற்றுக்கொள்வதோடு, அபிவிருத்தி செயற்பாடுகளினால் மக்களின் வாழ்க்கை நிலைகளில் முன்னேற்றத்தையும்  பிரதேசத்தின் தோற்றப்பாடுகளில் செழிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

இதேவேளை, இம் முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கு மக்கள் தொடர்ந்தும் தமது ஆதரவுகளை வழங்கிவரும் அதேவேளை, குறைபாடுகள் என மக்களுக்கு தென்படும் அனைத்து வசதிகளையும் நிறைவுசெய்து தருமாறு சம்மந்தப்பட்டவர்களிடம் தொடர்சியாக கோரிக்கைகளையும்  விடுத்து வருகின்றனர்.

இருப்பினும் நீண்ட கால யுத்தத்தால் பிரதேச அபிவிருத்தி உட்பட அனைத்து செயற்பாடுகளாலும் முடங்கிக்கிடந்த இப்பிரதேச மக்களின்  தேவைகள் அனைத்தும் முழுமையாக நிறைவு செய்யப்படவில்லை என்றாலும் அவ்வாறான தேவைகளை அதிகமாகக் கொண்ட இப்பிரதேசத்தின் மேம்பாட்டுக்காக தொடர்ந்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அவர் கூறினார்.

ஆனால் மீள்குடியேற்றத்திற்கு பின்னர் இப் பகுதிகளில் எவ்விதமான ஆக்கங்களும் நடைபெறவில்லை என்ற கருத்துக்களை சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

அவை மக்களின் வாழ்நிலை மேம்பாட்டை மீண்டும் தடுத்து நிறுத்தவேண்டும் என்ற சிந்தனைக்கு அமைவாக செயற்படும் சக்திகளுக்கு சாதகமான தகவல்களை மட்டுமே வெளியிட்டு வருகின்றன. 

இதனால் அவை அபிவிருத்திசார்ந்த தகவல்களை இருட்டடிப்புச் செய்ய முனைகின்றன.  இச்செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் உண்மைக்கு சான்று பகிர்ந்தளிப்பவையாக உள்ளன' என அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .