2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

வாள்வெட்டுக்கு உதவியவர் கைது

Menaka Mookandi   / 2013 மார்ச் 29 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு உதவி புரிந்த ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.எல்.விக்ரமராச்சி  தெரிவித்தார்.

யாழ். நாவாந்துறை பொம்மைவெளி பகுதியில் கடந்த 27ஆம் திகதி புதன்கிழமை முன் விரோதம் காரணமாக வயோதிபர் ஒருவர் மீது அசிட் வீச்சுடன், வாளால் வெட்டிய சம்பவம் இடம்பெற்றது.

அச்சம்பவத்தில், அதே இடத்தினைச் சேர்ந்த அப்துல் காதர் முகம்மது அலிம் நிஹார் (வயது 53) என்ற வயோதிபர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த வயோதிபர் மீதான அசிட் வீசி, வாளால் வெட்டிய நபர்களுக்கு முச்சக்கரவண்டி கொடுத்து உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை மேற்கொண்டவேளை, 6பேர் ர்ம்பந்தப்பட்டுள்ளதாகவும், அதில் பிரதான சந்தே நபர் புத்தளம் பகுதியில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி கூறினார்.
அதில், முச்சக்கரவண்டி கொடுத்து உதவிய சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இச்சந்தேகநபர் மீதான விசாரணை மேற்கொண்ட பின்னர் ஏனைய 5 பேரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .