2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

தமிழ், சிங்கள மக்களிடையேயான உறவில் விரிசல் நிலை: கீர்த்தி தென்னகோன்

Kogilavani   / 2013 மார்ச் 31 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


'யுத்தத்தின் பின்னர் இலங்கையில் உள்ள தமிழ், சிங்கள மக்களிடையே நல்லுறவு காணப்பட்டது. ஆனால் தற்போது இந்திய மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து தமிழ், சிங்கள மக்களிடையேயான உறவில் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது' என தேர்தல்
கண்காணிப்பு மையத்தின் அமைப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

மனித உரிமை மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, தேர்தல் கண்காணிப்பு ஆணையகம் இணைந்து ஏற்பாடு செய்த 'சமகால அரசியலில் தமிழ்-சிங்கள-முஸ்லிம் சிவில் சமூகத்தினரின் பங்கு' எனும் தொனிப்பொருளிலான கருத்துப் பகிர்விலே அவர் இதனை தெரிவித்தார்.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையுடன் யாழ்.மூர்த்தி விருந்தினர் விடுதியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இக்கருத்துப்பகிர்வில், விழுது மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் சாந்தினி சச்சிதானந்தம், சுதந்திர ஊடக செயலாளர் சுனில் ஜெயசேகரம், மைதிரிபால குணவர்த்தன, உட்பட பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, வடமாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பான பிரசாரத்தினை முன்னெடுப்பதுடன் மக்கள் தலைமைத்துவ ஆலோசனைகள் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இக்கருத்து பகிர்வின் போது,

தமிழக மாணவர்களின் போராட்டத்தின் பின்னர் தமிழ், சிங்கள மக்களின் உறவுகளிடையே விரிசல் நிலை ஏற்பட்டுள்ளதாக இதன்போது கீர்த்தி தென்னகோன் கருத்து தெரிவித்தார்.

இதேவேளை, மனித உரிமை மீறல்கள், மற்றும் ஜனநாயகம் பற்றி பேசுகிறவர்கள் தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டுமென்றும் கருத்துரைகள் வழங்கப்பட்டன. 

இதன்போது அரசியல்வாதிகளையும், சிவில் குழுவினை நியமித்து அதன் மூலம் ஒரு பிரதிநிதியை நியமித்து திர்வினை பெற்றுக் கொள்வதே முக்கிய நோக்கமாகும்  என்றும் பலர் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .