2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

தமிழ் மக்கள் மீண்டுமொரு அழிவை தாங்கும் நிலையில் இல்லை: சந்திரகுமார்

Kogilavani   / 2013 ஏப்ரல் 01 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


'தமிழ் மக்கள் மீண்டுமொரு அழிவை தாங்கும் நிலையில் இன்று இல்லை. எல்லாவற்றையும் இழந்து மறுபடியும் வாழ்வதற்காக மீண்டுகொண்டிருக்கின்றார்கள். எனவே மக்களின் எதிர்காலத்திற்காக அனைவரும் உழைக்க வேண்டும்' என நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார்; தெரிவித்துள்ளார்.

பரந்தன் குமரபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்; கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'நடந்துமுடிந்த யுத்தம் எமது மக்களின் உயிர்கள், உடமைகள் என மிகப்பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி சென்றுள்ளது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மக்களின் வாழ்விலும் பிரதேசங்களின் அபிவிருத்தியிலும் நல்ல முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறன.

மக்களின் அவலங்களில் அரசியல் வியாபாரம் செய்து வருகின்றவர்களே மீண்டுமொரு அழிவை நோக்கிய பாதைக்கு எம் மக்களை கொண்டு செல்லும் வகையில் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

தமிழ் மக்களும் ஏனைய மக்களை போன்று சகல உரிமைகளும் பெற்று வாழ வேண்டும். ஆனால் அதற்கான வழிமுறைகள் கடந்த காலம் போன்று இருக்க கூடாது. கடந்த கால வழிமுறைகள் மிகப்பெரும் தவறானவை என்பது நாம் உணரந்துள்ளோம்;.

அத்தோடு மக்கள் சிலரின் இலாபங்களுக்காக பயன்படுத்தப்படுவதனை மக்கள் அனுமதிக்க கூடாது, விழிப்பாக இருந்து நல்லதொரு எதிர்காலத்தினை நோக்கி செல்ல வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .