2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ். மாவட்டத்தில், வயலின், யோகா, ஹிந்தி கற்கை நெறிகளை ஆரம்பிக்க நடவடிக்கை

Kogilavani   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ். மாவட்டத்தில், வயலின், யோகா, ஹிந்தி ஆகிய கற்கைநெறிகளை யாழ்.இந்திய தூணைத்தூரகம் ஆரம்பிக்கவுள்ளது.

இப்பயிற்சிகள், எதிர்வரும் ஏப்ரல் இறுதிவாரம்- மே மாதம் பகுதியில் ஆரம்பிப்பதற்கு இந்திய தூதரகம் தீர்மானித்துள்ளது.

பாடநெறிக்கான பதிவுக் கட்டணம் 250 ரூபா என்றும் பயிற்சிக்கட்டணம் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சிகள் அணைத்தும் வாரநாட்களில் மாலை 5 மணியிலிருந்து 7 மணிவரை நடைபெறவுள்ளதென்றும் இக்கற்கைநெறிகளை தொடர விரும்புவர்கள் வாரநாட்களில் சமூகமளிக்கக்கூடியவர்களாக இருக்கவேண்டுமென யாழ்.இந்திய தூணைத்தூரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத.

இப்யிற்சிநெறிகள் அனைத்தும் இந்திய துணைத்தூதரகம், இல- 14, மருதடி வீதி, நல்லூரில் இடம்பெறவுள்ளன.

இதற்கமைவாக இப்பயிற்சியை தொடர விரும்புபவர்கள், ஏபரல் 12 ஆம் திகதிக்கு முன்னதாக கிடைக்கும் வகையில் தமது விண்ணப்பங்களை, cul.jaffna@mea.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது, 021-222053 என்ற தொலை நகல் இலக்கத்திற்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பத்தில், பெயர், வயது, இணையவுள்ள பாடநெறி (ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களை தெரிவு செய்ய முடியும்), மேலதிக தொடர்புகளுக்கான விபரங்கள் என்பவற்றை குறிப்பிடுமாறு கோரப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .