2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் புத்தாண்டையொட்டி 'திவிநெகும' சந்தை

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


நல்லூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தமிழ், சிங்கள புத்தாண்டையொட்டி 'திவிநெகும'  சந்தை யாழ். கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயத்தி;ல் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

நல்லூர் பிரதேச செயலர் செந்தில் நந்தன் தலைமையில் நடைபெற் இதற்கான நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் கலந்துகொண்டார்.

இப்புத்தாண்டுச் சந்தையில் சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திப் பொருட்கள்  சந்தைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது, புகைத்தல் எதிர்ப்பு தினத்தில் கடந்த வருடம்  சேகரிக்கப்பட்ட நிதியில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 500 மாணவர்களுக்கு 6,000 ரூபா வைப்பிலிடப்பட்ட வங்கிப்புத்தகங்களும் வழங்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .