2025 ஜூன் 18, புதன்கிழமை

கீரிமலை பகுதியில் முதாட்டியின் சடலம் மீட்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள கேணிக்கு அருகில் மூதாட்டி ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார்; தெரிவித்தனர்.

70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலமே இவ்வாறு இன்று மீட்கப்பட்டுள்ளது.

இவரின் சடலம் அடையாளம்காணப்படவில்லை என்றும், சடலத்தினை மல்லாகம் நீதிவான் பார்வையிட்ட பின்னர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .