2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ். பல்கலை தொழுகை அறைக்கு ஒயில் வீசி சேதம்

Super User   / 2013 ஏப்ரல் 10 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-றிப்தி அலி


யாழ். பல்கலைக்கழக தொழுகை அறை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இனந்தெரியாத குழுவினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது, தொழுகை அறையின் சுவர் பகுதிக்கு கழிவு எண்ணெய் (ஒயில்) வீசி சேதமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் தொழுகை அறையின் பெயர் பலகையும் இனந்தெரியாத குழுவினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த பெயர்ப் பலகை தற்போது அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் பிரதிநிதிகள் பல்கைலைக்கழக நிர்வாகத்துடன் நேற்று செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களின் நலன்கருதி தொழுகை அறை வழங்குமாறு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் நீண்ட காலமாக கோரிக்கைவிடுத்திருந்தது.

இந்நிலையிலேயே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் பல்கலைக்கழக உப வேந்தரின் அனுமதியுடன் இந்த தொழுகை அறை நலன்புரி விடயங்களுக்கு பொறுப்பான உதவி பதிவாளரின் அலுவலகத்திற்கு அருகாமையில் ஸ்தாபிக்கப்பட்டது.

இது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் விரைவில் கூடி கலந்துரையாடவுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தில் சுமார் 180 முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயில்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • தமிழன் Wednesday, 10 April 2013 08:09 AM

    இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

    Reply : 0       0

    M.A.A.Rasheed Wednesday, 10 April 2013 11:43 AM

    த‌மிழ், முஸ்லிம்கள் சேர வேண்டும் என்பது இதுதானா? திருந்தாத சமூகமாக ஆகிவிட்டது யாழ் சமுகம். இந்த குரோதத்தினால்தான் தமிழ் சமுகம் தலை நிமிர முடியாமல் தவிக்கிறது.

    Reply : 0       0

    IBNU ABOO. Wednesday, 10 April 2013 02:35 PM

    இனந்தெரியாதவர்கள் அல்ல அவர்கள். நல்லா தெரிந்த இனம்தான். இந்த வேலைய வேறு யார் செய்வார்கள்...?

    Reply : 0       0

    pradeep Wednesday, 10 April 2013 05:27 PM

    இந்த இனவாதம் எங்கு போய் முடியும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .