2025 ஜூன் 18, புதன்கிழமை

அபிவிருத்திப் பணிகளை இந்திய எம்.பி.கள் குழு பார்வை

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 10 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா,-எஸ்.கே.பிரசாத்


யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுவரும் அபிவிருத்திப் பணிகளை இன்று புதன்கிழமை காலை சென்று பார்வையிட்டுள்ளனர்.

அரியாலை மகேந்திரபுரத்திலும் எழுதுமட்டுவானிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்திய வீட்டுத்திட்டத்தை இந்தக் குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

மேலும் குருநகரில் அமைந்துள்ள வடகடல் வலைத் தொழிற்சாலைக்கு சென்ற இந்தக் குழுவினர், இந்திய அரசாங்கத்தின் 162 மில்லியன் ரூபா நிதியுதவியில் கையளிக்கப்பட்ட வலை பின்னும் இயந்திரங்களையும் வலைத் தொழிற்சாலையையும் பார்வையிட்டுள்ளனர்.

யாழ். பொது நூலகத்திற்கு சென்ற இந்தக் குழுவினர், யாழ். நூலகத்தின் சிறுவர் பகுதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டுள்ளதுடன், யாழ். நூலகத்தில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில்  மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பற்றியும் கேட்டறிந்துகொண்டனர்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருடன் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, வடகடல் வலைத் தொழிற்சாலை பொதுமுகாமையாளர் எப்.கேதீஸ்வரன் உள்ளிட்டோர் இணைந்திருந்தனர். 

இதேவேளை, இந்திய ரோலர் படகினால் யாழ். மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .