2025 ஜூன் 18, புதன்கிழமை

நுகர்வோரை கவரும் வகையில் பொருட்கள் உற்பத்தி செய்யவும்: சந்திரகுமார் எம்.பி.

Kanagaraj   / 2013 ஏப்ரல் 12 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}




-சுமித்தி தங்கராசா


கடந்த காலங்களில் ஏற்றுமதிக் கேந்திர தளமாக விளங்கிய கிளிநொச்சி சந்தை யுத்தத்தினால் சந்தை வாய்ப்புக்களை இழந்து விட்டது. அந்த இடத்தை பிடித்துக்கொள்ளவேண்டுமாயின் நுகர்வோரை கவரும் வகையில் பொருட்கள் உற்பத்தி செய்யவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்தார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை வளாகத்தில் நடைபெற்ற  இவ் வாழ்வின் எழுச்சி வாழ்வின் எழுச்சி புது வருட மாவட்ட சந்தையினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த யுத்தத்திற்கு முட்பட்ட காலத்தில்  எமது மாவட்டங்களிலிருந்து மிகப் பெருந்தொகையான உற்பத்திகள் ஏனைய மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

ஆனால் தென்பகுதியில் காணப்படும் விவசாய மாவட்டங்களின் உற்பத்திகளை நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் சந்தைப்படுத்தக் கூடிய வாய்ப்பை  தம்புள்ளைச் சந்தை ஏற்படுத்தி கொடுக்கின்றது. கடந்த காலங்களில் தம்புள்ளைச் சந்தையைவிடவும் ஏற்றமதிக் கேந்திர தளமாக கிளிநொச்சி சந்தை விளங்கியிருக்கின்றது.

அந்தவகையில், மீண்டும் அந்நிலைமையை ஏற்படுத்தி கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் கிளிநொச்சியில் பொருளாதார சந்தை ஒன்றினை அமைப்பதற்கான செற்பாடுகள் முன்னெடுக்ககப்பட்டுள்ளன. இதேவேளை,  எமது பகுதி உற்பத்திகள் மிகத்தரமானவையாக அமைந்துள்ளபோதும் அவை; கொள்வனவாளர்களை கவரும் வகையில் சந்தைப்படுத்தும் நுட்பங்கள் கையாளப்பட வேண்டும்.

குறிப்பாக, கொழும்பில் நடைபெற்ற புதுவருட சந்தையில் வடமாகாணத்திலிருந்து கொண்டுசென்ற  உற்பத்திகொருட்கள் விரைவாக விற்பனை செய்யப்பட்டிருந்த நிலைமையைக் காணமுடிந்தது. எனவே உள்ளூர், உற்பத்தியாளர்களும் சந்தைப்படுத்தலை இலக்காகக் கொண்டு உற்பத்திகளில் ஈடுபட வேண்டும். அதிலும் நாடுதழுவிய ரீதியில் சந்தையிடக்கூய பொருட்களை உற்பத்தி செய்யுமிடத்து சந்தை வாய்ப்புக்களை  அதிகமாகப் பெறமுடியும் என அவர் கூறினார்.

அதேவேளை, துரதிஸ்ர வசமான யுத்தம் இம்மாவட்டத்தின் சந்தை வாய்ப்புக்களை தட்டிப்பறித்துவிட்டது. அதனால், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இவ்வாறான சந்தைகளை நாடளாவிய ரீதியில்  செயற்படுத்திவருகின்றது. இதன்மூலம் பல உள்ளூர் உற்பத்தியாளர்கள் வாழ்வாதார முன்னேற்றத்ததையும் எட்டியுள்ளனர். இதேவேளை மக்களும் இவ்வாறான  உள்ளூர் உற்பத்திகளை  நுகர்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன்,மேலதிகஅரசாங்க அதிபர் சிறீனிவாசன் விவசாயத்திணைக்கள பிரதிப்பணிப்பாளர் செல்வராசா மாவட்டசெயலக்திட்டமிடல் பணிப்பாளர் , மாவட்டசெயலக பிதித்திட்டபணிப்பாளர் கேதீஸ்வரன், ஈ.பி.டி.பி.யின் கிளிநொச்சி மாவட்டஅமைப்பாளர் தவநாதன் மாவட்ட சமுர்த்திஉதவிஆணையாளர் திருமதி பரமோதயன்,ஆகியோரும் அரச திணைக்களங்களின் அதிகாரிகள் மீள்எழுச்சித்திட்ட உத்தியோகஸ்த்தர்கள்.உள்ளூர் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .