2025 ஜூன் 18, புதன்கிழமை

உதயன் இயற்திரப்பகுதிக்கு சீல் வைப்பு

Kanagaraj   / 2013 ஏப்ரல் 13 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


இனந்தெரியாத ஆயுத தாரிகளால் உதயன் பத்திரிகையின் இயந்திரப்பகுதி எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதையடுத்து இயந்திரப்பகுதிக்கு பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து இரசாயனப் பகுப்பாய்வாளர்கள் வரும் வரை உதயன் இயற்திரப்பகுதி பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது

இனந்தெரியாத ஆயுத தாரிகளால் உதயன் பத்திரிகையின் இயந்திரப்பகுதி இன்று சனிக்கிழமை அதிகாலை 4.50 மணிக்கு  எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் வருகை தந்த பொலிஸார் குறித்த பகுதியை ஆய்வு செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை நடத்த கொழும்பில் இருந்து இரசாயனப் பகுப்பாய்வாளர்கள் வருகை தரவுள்ளதாகவும்  அவர்கள் வரும் வரை இயந்திரப்பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அதுவரை இயந்திரப்பகுதி சீல் வைக்கப்பட்டுளளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு உதயன் நிர்வாகம் எதிர்பு தெரிவித்துள்ளதோடு இயந்திரப்பகுதியை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .