2025 ஜூன் 18, புதன்கிழமை

ஜனநாயகத்திற்கு மூடுவிழா செய்யும் நோக்கம்: சுரேஸ்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 13 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

பத்திரிகையை இழுத்து மூடி ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கு மூடுவிழாவினை செய்யும் நோக்கிலேயே உதயன் மீதான தாக்குதல் அமைந்துள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள உதயன் பத்திரிகையின் தலைமை அலுவலகம் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை 4.50 மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் சேதமடைந்த பகுதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பார்வையிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உலத்தில் இது போன்ற கட்டுமிரண்டித்தனமான ஒரு செயல் எங்கும் நடைபெறவில்லை உதயன் பத்திரிகையை வரவிடாமல் தடுக்கும் நோக்கிலேயே இந்தச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது கடந்த காலத்தில் செய்தியாளர்கள் தாக்கப்படுவது, அலுவலகம் தாக்கப்படுவது, விநியோகஸ்தர்கள் தாக்கப்படுவது என்று நடைபெற்று இன்று பத்திரிகையின் அச்சு  இயந்திரப்பகுதி தாக்கப்பட்டுள்ளது இந்த நடவடிக்கையானது ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கு மூடுவிழா செய்யும் நோக்கிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் உள்ள உதயன் அலுவலகம் தாக்கப்பட்டு இதற்கு ஜனாதிபதி  மட்டத்தில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள போது இவ்வாறான தொரு சம்பவம் நடைபெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .