2025 ஜூன் 18, புதன்கிழமை

நீண்டகாலமாக குடியிருப்பவர்களுக்கே காணி உரிமம் வழங்கப்பட வேண்டும்: சந்திரகுமார் எம்.பி.

Kanagaraj   / 2013 ஏப்ரல் 13 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}



-சுமித்தி தங்கராசா

காணிகளில் நீண்ட காலமாக குடியிருப்பவர்களுக்கே காணி உரிமம் வழங்கப்பட வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்தார்.

பரந்தன் கிராம மக்களுடனான   கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது. கலந்துரையாடலின் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த பல தசாப்பதங்களுக்கு மேலாக அரச காணிகளில் குடியிருந்தும், இதுவரையில் காணி உரிமத்தினை பெறாத குடும்பங்களுக்கும் உரிமங்கள் வழங்க வேண்டியுள்ளதுடன்,  அரசகாணிகளில் அத்துமீறி குடியேறி நீண்ட காலமாக குடியிருப்பவர்களுக்கும் காணி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் பிரதேச செயலகங்கள் தோறும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே படித்தவாலிபர்; திட்டம் மத்திய வகுப்புத் திட்டம் போன்ற திட்டங்களுக்கூடாக காணிகளைப் பெற்றவர்களில் பலர் காணிகள்  வழங்கப்பட்ட காலத்திலேயே காணிகளை விட்டு வெளியேறியதோடு,  காணிகளற்றவர்களை பாதுகாப்பிற்காக  அமர்த்திவிட்டு சென்று விட்டனர். ஆனால் குடியேறியவர்கள் பல தசாப்பத்ஙகளாக வாழ்ந்து அக்காணியை புனரமைத்து தமது சந்ததியினருக்கும் பகிர்ந்தளித்துள்ள நிலையில் தற்போது  காணி உரிமையாளர்கள் காணிக்கு உரிமை கோருகின்றனர்.

ஆனால்,  தற்போது அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்தின் பிரகாரம் குறித்த காணிகளில் நீண்ட காலம் குடியிருப்பவர்களுக்கே அக்காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் அவர் கூறினார்.

அதுவே, நியாயமும், ஆனால், குறுகியகாலத்திறகுள் காணிகளில் குடியேறியவர்களுக்கு காணி உரிமம் வழங்கப்படமாட்டாது. ஆனால் அவர்கள் காணிகள் அற்றவர்கள் என இனங்காணப்படுமிடத்து அவர்களக்கு அரச காணிகள் உள்ள பகுதிகளில் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்  அவர் கூறினார்.

இதேவேளை மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பதிலளித்த அவர்.

பரந்தன் பகுதியில் மீள்குடியேற்றத்திற்கு பின்னர் பல உதவித்திட்டங்களும் அபிவிருத்தி செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது  சுமார் அறுநூறு குடும்பங்களுக்கு மிகப் பெறுமதியான வாழ்வாதார உதவிகளைப் வழங்கப்பட்டுள்ளன ,அத்தோடு 410 மல கூடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

பரந்தன் கிராமசேவையாளர் பரிவிற்கு ஏற்கனவே நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளபோதும் இன்னமும் 400வரையான குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படவேண்டியுள்ளது காணிப்பிணக்குகளுக்கு தீர்வகாண்தில் ஏற்பட்ட காலதாமதமே இதற்கும் காரணமாக அமைந்த போதும் இந்திய வீட்டுத்திட்டத்தில் கிராமங்கள் பட்டியலிடப்பட்டதற்கமைவாக இவ்வருட இறுதிக்குள் காணிப்பிணக்குகளும் தீர்க்கப்பட்டு, வீட்டுத்திட்டங்களையும் வழங்கமுடியும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை அப்பகுதியில் பாடசாலைக்கு நிரந்நதர கட்டம் அமைப்பதால், அப்பகுதியில் முழுமையாக மின் அணைப்புக்களை வழங்குவதற்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்று மதில் அமைப்பதற்கும் அப்பகுதி மைதானத்ததை.புனரமைப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலில்,  கண்டாவளைப்பிரதேச செயலர் முகுந்தன், கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவைச் சேர்ந்த சுதர்சன் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் மற்றும் கண்டாவளைக ;கோட்டக்கல்விஅதிகாரி, அப்பகுதி கிராமசேவையாளர் ஆகியோரும் கண்டாவளை குடியேற்ற உத்தியோகஸ்த்தர்களும், பரந்தன் கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் மகேந்திரன், மாதர்கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவி கமலேஸ்வரி ஆகியோரும்  மன்றும் கண்டாவளை பிரதேசத்தில் பணியாற்றும் பட்டதாரிப்பயிலுனர்களும் பெருந்திரலான மக்களும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .