2025 ஜூன் 18, புதன்கிழமை

வடக்கில் இராணுவத்தை பலப்படுத்த நில அபகரிப்பு: சுரேஷ்

Super User   / 2013 ஏப்ரல் 15 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

வடக்கில் இராணுவத்தை பலப்படுத்தம் நோக்கில் அரசாங்கம் நில அபகரிப்பை மேற்கொண்டு வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிததார்.

வடக்கில் இராணுவ குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் போதும்  150,000 இராணுவத்தினர் வடக்கில் கடமையாற்றி வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

வடக்கில் இராணுவத்தின் நிலையைப் பலப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இதனால் தனியாருக்குச் சொந்தமான பெருமளவான காணிகள் பல அபகரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அரசாங்கத்தினால் வடக்கில் உள்ள அனைத்து மாவட்டச் செயலகங்களுக்கும் காணி அபகிப்பு உத்தியோகஸ்தர்கள் நியமிக்க்பட்டுள்ளனர். இவ்வாறான உத்தியோகஸ்தர்கள் மூலம் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அண்மையில் வவுனியாவில் உள்ள நொச்சிமோட்டை பகுதியில் காணி அபகரிப்பு உத்தியோகஸ்தரால் தனியாருக்கச் சொந்தமான 20 ஏக்கர் காணி எவ்விதமான அறிவித்தலோ நஷ்;டஈடோ இன்றி 56ஆவது படைப்பிரிவின் தலைமை அலுவலகம் அமைப்பதற்கு அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று சாவகச்சேரி கெற்பெலி பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணி: சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் அபகரிப்புச் செய்யப்பட்ட 65 ஏக்கர் காணியிலும் தற்போது பாரிய படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .