2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் குடும்பஸ்தர் மாயம்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 16 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை என பொலிஸிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இளவாலை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் ஜெசிந்தன் (வயது 27) என்பவரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின்; யாழ். பிராந்திய அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேற்படி நபர் காணாமல் போனமை தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஏற்கெனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தான் முறைப்பாடு செய்துள்ளதாக இவரது மனைவி தெரிவித்தார்.

கடந்த 4ஆம் திகதி நண்பர் ஒருவரின் கடவுச்சீட்டு புத்தகத்தை பெற்றுக்கொள்வதற்காக மானிப்பாய் பகுதிக்கு செல்வதாகக் கூறி காலை 7.30 மணியளவில் வீட்டிலிருந்து  புறப்பட்டவர் மாலை வரையும் வீட்டிற்கு திரும்பவில்லை.

இதனைத் தொடர்ந்து உறவினர்களின் வீடுகளில்; தனது கணவரை தேடிப் பார்த்தபோது அவர் உறவினர்களின் வீடுகளுக்கும் செல்லவில்லை என தெரியவந்ததைத் தொடர்ந்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் ஏற்கெனவே முறைப்பாடு செய்ததாக அவரது மனைவி மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .