2025 ஜூன் 18, புதன்கிழமை

பயந்து ஓடியதால் சிக்கிக்கொண்ட திருடன்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 16 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

நீர் இறைக்கும் மோட்டாரை திருடியவர், வீதியில் நின்றவர்களைப் பார்த்து பயந்து ஓடியதினால் பிடிபட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

மோட்டாரைச் சுமந்தபடி வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியால் ஒருவர் சென்றுக்கொண்டிருந்தார். அவரில் சந்தேகம் கொண்ட அவ்வூர் இளைஞர்கள், எங்கே மோட்;டார் கொண்டு செல்கின்றீர்கள், விற்கவா என்று கேட்டனர். உடனே மோட்டரைக் கொண்டு வந்தவர் மோட்டரை அப்படியே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்.

துரத்திச் சென்ற இளைஞர்கள் அவரைப் பிடித்து விசாரித்த போது, கொக்குவில் சொர்ணவடலி பிள்ளையார் கோவிலடியிலுள்ள ஒரு வீட்டில் இதனைத் திருடியதை தான் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அந்த இளைஞர்கள்  மோட்டாருடன் திருடனையு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .