2025 ஜூன் 18, புதன்கிழமை

திருமணம் செய்வதாகக்கூறி பண மோசடி செய்த நபர் யாழில் கைது

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 26 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சொரூபன்

யாழ்ப்பாணம் மூன்றாம் குருக்குத்தெருவைச் சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்வதாகக் கூறி 12 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பணமோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார்.

இன்று யாழ். பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து யாழ். பிறவுண் வீதியில் உள்ள நீராவியடி பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் வள்வெட்த்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 03 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா காசோலை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் முறைபாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சந்தேக நபர் தலைமறைவாகி உள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .