2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மாதகல் மலசல குழியிலிருந்து எலும்புக்கூடு மீட்பு

Kanagaraj   / 2013 மே 07 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, சுமித்தி தங்கராசா

கைவிடப்பட்ட மலசல குழியில் இருந்து இனம் தெரியாத ஒருவரின் எலும்புக்கூட்டு மீட்கப்பட்டுள்ளது.சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாதகல் கிழக்கு ஜே.152 கிராம அலுவலர் பிரிவிலிருந்து இந்த எலும்பு கூடு மீட்கப்பட்டுள்ளது.

மாதகல் பகுதியில் உள்ள  உதயதாரகை சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தூர்ந்துபோன நிலையில் காணப்பட்ட மலசல கூடக் குழியை துப்பரவு செய்யும் நடவடிக்கையை வீட்டு உரிமையாளாகள் நேற்று மாலை மேற்கொண்டனர்.
இந்த நேரத்தில் மண்டையோடு வாயின் பற்கள் உள்ளடக்கிய தாடைப் பகுதி காலின் துடை எலும்பு என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 இது சம்பந்தமாக இளவாலைப் பொலிசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து குறிப்பிட்ட  இடத்திற்;கு சென்ற பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  சிந்திக்க என். பண்டாரா தலைமையிலான குழுவினர் அந்த குழியிலிருந்து எலும்பு கூடொன்றை மீட்டனர்.

அந்த இடத்திற்கு சென்ற மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிபதிபிஜே.தம்பித்துரை சட்டவைத்தியதிகாரியுடன் குறிப்பிட்ட இடத்திற் கு சென்று பார்வையிட்டதுடன் எலும்பு கூட்டை யாழ் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .